எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி
எகிப்து மக்களின் எழுச்சி எல்லா நாட்டரசுகளுக்கும் எச்சரிக்கை மணி
எகிப்பதிய மக்களின் விடுதலை சதுக்க போராட்டம் கடைசியாக வெற்றி பெற்று விட்டது. முபாரக் நாட்டை விட்ட ஒடி விட்டார். ராணுவம் தேர்தலுக்கு உறுதி அளித்துள்ளது. போராட்ட காரர்கள் துணை ஜனாதிபதியை பொறுப்பு ஏற்பதை விரும்பினாலும்
ராணுவம் அதற்கு இசைவளிக்குமா என்பது தெரியவில்லை. ராணுவம் விரும்பவது எல்லாம் போராட்டகாரர்கள் உடன் கலைந்து செல்ல வேண்டும் என்பதாக இருக்கிறது. 300 பேரை இழந்து பெறப்பட்ட வெற்றி. அவர்கள் செய்த தியாக மாபெரும் தியாகமாகும். ஆதிக்க சக்தியை எதிர்த்து மக்கள் போராடி வெற்றி பெற்றதை கண்முன்னால் ( தொலைகாட்சி வாயிலாக)காண்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
மக்கள் ஒன்று சோ்ந்தால் எப்படிப்பட்டவர்களையும் கீழே இறக்கி விடலாம் . எகிப்திய மக்களின் போராட்டம் பக்கத்து அரபு நாடுகளுக்கு பரவியதை கண்ட போது மற்ற நாடுகள் எங் கே நமக்கும் ஆபத்து வந்து விடுமோ என அச்சம் அடைந்ததை நம்மால் உணர முடிந்தது.
நம்ம இந்தியா கூட பயந்து போய் எகிப்திய போராட்டம் தொடர்பான செய்திகளை செய்தி நிறுவனங்கள் வெளியிடுவதை குறைக்க வைத்து விட்டது. முதல் 8 நாட்கள் விலாவாரியாக வந்த செய்திகள் படிபடியாக தவிர்க்கப்பட்டதை கண்டு எனக்கு சிரிப்பு தான் வந்தது.
தேவையற்ற பயம். நமது மக்களை தான் ஆண்டு ஆண்டு காலமாய் அவர்களது துன்பங்களுக்கு விதிதான் காரணம் என நம்பவைத்து தற்போது விதி அவர்கள் இரத்தத்தில் ஊறி போய் விட்ட ஒரு விஷயமாகிவிட்டது. நாய் வந்து வாயில் மொண்டுட்டு போனாலும் –நாயை ஊச்ச விட்ட பெண்ணை ஊஷார் பண்ணுவதை ரசிக்கும் கூட்டம் தானே நாம்.
ஆதிவாசிகளை வனங்களை விட்டு விரட்டினால் நமக்கென்ன. லட்சகோடிகளில் கொள்ளை அடித்தாலும் அவன் தரும் ஆயிரத்தை வாங்கிவிட்டு வாக்களிக்க தயாராகிவிட்ட ஒரு ஈன ஜென்மங்கள்தானே நாம் . இது உங்க பணம்தான் வாங்கி கொள்ளுங்கள் ஆனால் வாக்கை எங்களுக்கு போடுங்கள் என பொழிப்புரை கொடுக்கும் அரசியல்வாதிகள் நடிகர்கள் நிறைந்த நாடு நம் நாடு.
எகிப்து மாதிரி மக்கள் எழுச்சி வர வாய்ப்பு இருக்கிறதா என்ன. ஏன் நம் தமிழர்கள் இப்படி சுரணை இல்லாமல் போய்விட்டார்கள் கோழையாக பயந்தாங்கொள்ளிகளாக வாழ்கிறார்கள் (என்னையும் சேர்த்துதான்) என்று யோசித்து பார்த்த போது அதற்கு காரணம் இதுவாக இருக்குமோ என எண்ணம் வந்தது
1. விதியை நம்புவதால்
2.நீண் ட காலம் ஆங்கிலேயர்க்கு அடிமை யாக இருந்ததால்
3.சமண மத புத்த மத அகிம்சை வழிகளை பின்பற்றியதால்
4. சோறு கண்ட இடம் சொர்க்கம் என பழகி விட்டதால்
5. சாதி பித்து பிடித்து அலைவதால்
6.. சில ஆயிரங்களுக்கும் பிரியாணி குவாட்டர் பிராந்தியில் மயங்கி விடும் பு்த்தி
7. சாமி மேல் சத்தியம் போட்டு விட்டு மாற்றி போட்டால் சாமி குற்றம் ஆகி விடும் என
நம்புவதால்
8. தான் சார்ந்து கட்சி அவன் தலையையே வெட்டினாலும் கட்சி விசுவாசம் காட்டும் மடமை
9. கல்வி அறிவு இன்மை.
10 படித்தவர்கள் பயந்து ஒதுக்கி விட்டது.
11 நல்லவர்கள் நமக்கு எதற்கு வம்பு இருக்கிற பெயரை தக்க வைத்து கொள்ளுவோம் எனும் எண்ணம்
12. சோம்பேறிகள்
13. தீக்குளிக்கு தெரியும் ஆனால் அந்த உயிரை எதிரியின் உயிரை எடுப்பதில் விட தெரியாமை
14.எல்லாவற்றையும் சீக்கிரம் மறந்து விடும் தன்மை.
15. பொது நலமின்மை.
இன்னும் எத்தனையோ.
வல்லம் தொடும் தூரத்தி்ல்
இன மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டபோதும்
சும்மா இருந்து விட்ட நம்மை நாமே செருப்பால்
அடித்து கொண்டால் தான் பாவம் விமோசம் கிடைக்கும்.
வல்லம் தொடும் தூரத்தி்ல்
இன மக்களின் வாழ்க்கை சூறையாடப்பட்டபோதும்
சும்மா இருந்து விட்ட நம்மை நாமே செருப்பால்
அடித்து கொண்டால் தான் பாவம் விமோசம் கிடைக்கும்.
எகிப்து மக்கள் போல் எம் மக்கள் எழுச்சி அடைவார்களா.
அது கானல் நீர்தானா.
காலம் பதில் சொல்லுமா
வாகை தேவதை
தமிழன் கழுத்தில் மாலை யிடுவது எப்போது.
காலம் பதில் சொல்லுமா
வாகை தேவதை
தமிழன் கழுத்தில் மாலை யிடுவது எப்போது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக